ஆம்பியர் | தினம் ஒரு அறிவியல் மேதை

 

 ஆம்பியர்

ஆம்பியர் அற்புதமான இயற்பியல் அறிஞர் பிரெஞ்சு தேசம் அறிவு வெளிச்சத்தில் மூழ்கிக்கொண்டு இருந்த காலத்தில் இவர் பிறந்தார். இவரின் அப்பா ரூசோவின் சிந்தனைகளால் கவரப்பட்டார், பிள்ளைகள் அடைந்துக் கிடக்கும் கட்டிடங்களில் கல்வி கற்கக்கூடாது; இயற்கையை கவனித்து இயல்பாக 13 ஆனந்தமாக கல்வி கற்க வேண்டும் என்பதை அவரின் தந்தை அப்படியே ஏற்றுக்கொண்டார். இவரைச் சுற்றி இருக்கும் விஷயங்களை உற்றுநோக்க விட்டார்; நூலகத்தினுள்ளே கொண்டு போய்விட்டார்; அற்புதமான புத்தகங்களைப் படிக்க வாங்கிக்கொடுத்தார். இலத்தீனை முதலில் வெறுத்தாலும் பின் அதைப் பயின்று அற்புதமான அறிவியல் நூல்களைக் கற்றுத் தேர்ந்தார்.

ஆம்பியருக்கு கணக்கில் எல்லையற்ற ஆர்வம் உண்டானது. புரட்சி ஏற்பட்ட பின் நடந்த குழப்பம் நிறைந்த அரசியல் சூழலில் அப்பா கொல்லப்பட்டார். மகன் வேலை போனார்; கணித ஆசிரியராக இணைந்து வேலை செய்தார். அதே சமயம் வரலாறு , கவிதை, இயற்கை அறிவியல். தத்துவம் ஆகியவற்றையும் காதலோடு கற்றுத்தேர்ந்தார். நெப்போலியனின் ஆட்சிக்காலத்தில் அறிவியலுக்கு முன்னுரிமை தரப்படவே இவர் பேராசிரியர் ஆனார்.

அப்பொழுது தான் ஹான்ஸ் கிறிஸ்டியன் ஓயர்ஸ்டட் என்கிற டானிஷ் நாட்டு அறிவியல் அறிஞர் மின்சாரம் பாய்கிற பாதையின் அருகே வைக்கப்படுகிற காந்த ஊசி, விலகலுக்கு உள்ளாகிறது எனச் சொன்னார். இதைக் கேள்விப்பட்டு மின்னியல் மற்றும் காந்தவியல் இரண்டுக்கும் இடையே தொடர்பிருப்பதை ஆம்பியர் உணர்ந்தார். மேலும் அதை விரிவுபடுத்தி இரண்டு கம்பிகள் இடையே மின்சாரம் பாயும் பொழுது அவை நேர்திசையில் செல்கின்றனவா அல்லது எதிர்திசையில் செல்கின்றனவா என்பதைப் பொருத்து விலகுதல் அல்லது ஈர்த்தல் நிகழும் என்றார்.

இதுவே மின்னியக்கவிசையியல் துறைக்கு அடித்தளம் அமைத்தது. மேலும் ஆம்பியர் விதியை உருவாக்கினார் அதன் மூலம் மின்சாரம் பாயும் இரண்டு கம்பிகளுக்கு இடையே ஏற்படும் மாற்றத்தை விளக்கினார். தன் விதியைக் கொண்டு கூலும்பின் காந்த விதியோடு அது ஒத்துப்போவதை ஆய்வுகளின் மூலம் அற்புதமாக நிரூபித்தார். அவர் எழுதிய ‘Memoir on the Mathematical Theory of Electrodynamic phenomena, Uniquely Deduced from Experience' எனும் அற்புத நூலில்தான் முதன் முதலில் மின்னியக்கவிசையியல் எனும் வார்த்தை பயன்படுத்தப்பட்டது. இறக்கிற பொழுது “இறுதியாக மகிழ்வோடு சாகிறேன் நான்.” எனக் குறித்து வைத்துவிட்டு இறந்துபோனார், இந்த மாபெரும் அறிஞர். அவரின் பெயராலேயே மின்சாரத்துக்கான எஸ்.ஐ. அலகு வழங்கப்படுகிறது.

Post a Comment

Previous Post Next Post

Follow Outlines of Botany